Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.05.2026
Share:

By Village Missionary Movement

Monday, 11-May-2026

இன்றைய தியானம்(Tamil) 11.05.2026

 

ஜெபத்தின் விளைவு

 

“கர்த்தாவே,... என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்” – 1 இரா.18:37

 

எலியாவின் ஜெபம், பாகாலின் தீர்க்கதரிசிகளை அழிக்க வேண்டும் என்பதல்ல, பரலோகத்திலிருந்து இடிமுழக்கம் வர வேண்டும் என்றும் அல்ல! மாறாக கர்த்தருடைய வல்லமை விளங்குவதன் மூலமாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் இருதயத்தை தேவன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதே! அந்த சமயத்தில் எலியா செய்த மூன்று காரியங்களை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

சரி செய்தல்: எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை செப்பனிட்டான். ஆம், பிரியமானவர்களே நாமும் நம் இருதயத்தை செப்பனிட வேண்டும். நம் ஒவ்வொருவர் இருதயத்திலும் செப்பனிட வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டல்லவா? சிந்தித்து பாருங்கள். மாற்கு 7:21-23 ல் இயேசு கிறிஸ்து நம்முடைய இருதயத்தை சரி செய்து கொள்ள அழைக்கிறார். உங்கள் இருதயத்தை செப்பனிட ஆயத்தமா?

 

மறு தொடக்கம்: எலியா செய்த இரண்டாவது காரியம் விசுவாசத்துடன் வேலையை துவங்குகிறார். ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதைச் சுற்றிலும் வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையை துண்டித்து விறகுகளின் மேல் வைத்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் தண்ணீரை ஊற்றினான். நாமும் நம் இருதயத்தை செப்பனிட்டு முடித்தாயிற்று. அடுத்ததாக நாம் நம் விசுவாச வாழ்வை தொடங்க வேண்டும். செப்பனிடுதல் எளிது. ஆனால் அது மறுபடியும் பழைய நிலையை அடையாமல் இருக்க அனுதினம் தேவனுடன் வாழப் பழக வேண்டும்.

 

விளைவு: கர்த்தரிடத்திலிருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து கர்த்தரே தெய்வம் என்றார்கள். எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். இது நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆம், ஆண்டவரிடமிருந்து நன்மைகளை பெற்றுக் கொள்ள நாம் நம்மை சரி செய்து கொண்டு மாறுபட்ட வாழ்க்கை வாழ வேண்டும். விசுவாச வாழ்வில் எலியாவைப் போல் உறுதிப்பட எங்களுக்கு உதவிச் செய்யும் என்று ஆண்டவரிடம் மன்றாடுவோம். 

 

சரிசெய்தல் + மறுதொடக்கம் + விளைவு = ஆயத்தமாகுதல் 

நாமும் ஆயத்தமாவோம். பிறரையும் ஆயத்தப்படுத்துவோம்.

- S. வினோஜ்

 

ஜெபக்குறிப்பு 

VBS ல் கலந்துகொள்ளும் பிள்ளைகள் கர்த்தருக்கு பரிசளிக்கிறவர்களாக மாற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al padişahbet padişahbet giriş