By Village Missionary Movement
Sunday, 05-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 05-06-2022
உதவும் கரங்கள்
“...நீங்கள்... உருக்கமான இரக்கத்தையும் தயவையும்... தரித்துக் கொள்ளுங்கள்” – கொலோ. 3:12,14
குட்டீஸ்! உங்களுடைய விடுமுறை நாட்களை ஜாலியாக Enjoy -பண்ணி இருப்பீங்க இல்லையா? சொந்தக்காரங்க வீடு, Tour, Picnic... இப்படி எல்லாரும் சந்தோஷமா இருந்திருப்பீங்க. அப்படித்தானே! Ok, இன்றைக்கு மற்றவர்களையும், எப்படி சந்தோஷப்படுத்தலாமென்று ஒரு கதை கேட்கலாமா? சுசீலா அக்கா ஒருநாளில் எத்தனை பேருக்கு உதவி செய்றாங்க என்று பார்ப்போமா?
சுசீலா எப்பவும் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்ற இரக்க குணமுள்ள பிள்ளையாய் இருந்தாள். அன்றைக்கு டயடாக இருந்தாலும் எப்பொழுதும் போல காலமே, எழுந்து, முகம் கழுவி, அம்மாவிடம் டீ வாங்கி குடித்துவிட்டு, வீட்டுத்தோட்டத்துப் பக்கம் சென்றாள். அருகே உள்ள செடிகளும், பூக்களும் பார்க்க அழகாக இருந்தன. அந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினாள். நீங்க செடி, மரமெல்லாம் வளர்ப்பீங்களா? அப்போது அவள் வளர்க்கும் செல்லப் பூனை “மியாவ், மியாவ்” என்று கத்திக்கொண்டே வந்தது. அந்தப் பூனையின் காலில் அடிபட்டிருந்ததால், அதற்கு மருந்து போட்டு தடவிக்கொடுத்து, “வலிக்காது சீக்கிரம் சரியாகிடும்” என்று சொன்னாள். பதிலுக்கு பூனையும் “மியாவ்” என்று நன்றி சொன்னது போல் இருந்தது.
சுசீலா வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு சின்னப் பையன் தனது குட்டி சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தான். புதிதாக சைக்கிள் ஒட்டுவதால் கொஞ்சம் கடினமாக இருந்தது. இதைக் கவனித்த சுசீலா வேகமாகச் சென்று, அவனுக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லிக் கொடுத்தாள். அவனும் ஈஸியாக பழகிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து ஒரு பாட்டியம்மா அந்த வழியாக காய்கறி வாங்கிக் கொண்டு சென்றார்கள். கல் இருந்ததைக் கவனிக்காமல், இடறிக் கீழே விழுந்ததால், காய்கறியெல்லாம் கொட்டிவிட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த சுசீலா பாட்டிக்கு காய்களையெல்லாம் பொறுக்கிக் கொடுத்து, “காலில் அடிபடலையே பாட்டியம்மா”, என்று அன்பாக விசாரித்தாள். “குட்டிப் பிள்ளையாக இருந்தாலும் இவ்வளவு அன்பாக இருக்கிறியே பாப்பா” என்று வாழ்த்தி நன்றி சொன்னாங்க. “நன்றி பாட்டியம்மா” என்று பதிலுக்குச் சொன்னாள். அந்த விடுமுறை சுசீலாவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
செல்லக் குட்டீஸ்! நீங்களும் உங்க குட்டிக் கரங்களால் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது உண்மையாகவே இயேசப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. இந்த உலகத்தில் இயேசப்பா வாழ்ந்தபோது, நன்மை செய்கிறவராகவே வாழ்ந்தாங்க. நீங்களும் அப்படித்தானே! குட்டீஸ்! இரக்கமுள்ள மனசு இருந்தால்தான் உதவி செய்ய முடியும். அதனால் இரக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள். இயேசப்பாவின் பிள்ளையாய் வாழ்ந்து காட்டுங்கள்.
- A.பியூலா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250